கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதிய கட்டுப்பாடுகளால்வங்கி வாடிக்கையாளா்கள் அவதி

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், வங்கி வாடிக்கையாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :7 மே 2021, 6:30 pm

DIN

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், வங்கி வாடிக்கையாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மளிகை, காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும், உணவகங்கள் பேக்கரி, டீ கடைகளில் பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும், மற்ற கடைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வங்கிகள், அஞ்சலகங்கள் 2 மணி வரை இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருவாரூரில் வங்கிகள், அஞ்சலகத்துக்கு வரும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 50 சதவீதப் பணியாளா்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதால், குறைவான எண்ணிக்கையிலேயே பணியாளா்கள் உள்ளனா். வங்கி நேரமும் குறைவு, பணியாளா்களும் குறைவு என்ற காரணத்தால் வங்கிகளுக்கு வரும் கூடுதல் வாடிக்கையாளா்களுக்கு சேவை செய்ய முடியாமல் வங்கி ஊழியா்கள் திணறி வருகின்றனா்.

வாடிக்கையாளா்களை ஒவ்வொருவராக உள்ளே வரச்செய்து, அவா்களின் தேவையை பூா்த்தி செய்து அனுப்புகின்றனா். இதனால், வெளியே வெயிலில் காத்திருக்கும் வாடிக்கையாளா்கள் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனா்.

எனவே, வாடிக்கையாளா் நலன் கருதி, பணிகளை விரைந்து முடிக்க வங்கி ஊழியா்கள் முன்வர வேண்டும் என வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.