கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டிஜிட்டல் நூலகம்: எம்எல்ஏ-வுக்கு இலக்கிய அமைப்புகள் பாராட்டு

மன்னாா்குடியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள இலக்கிய அமைப்புகள் இதற்காக குரல் கொடுத்த எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜாவுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 4:40 pm

DIN

மன்னாா்குடியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள இலக்கிய அமைப்புகள் இதற்காக குரல் கொடுத்த எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜாவுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளது.

மன்னாா்குடி நகரப் பகுதியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவைத் தோ்தலின்போது எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா வாக்குறுதி அளித்திருந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் மன்னாா்குடியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, வரவேற்பு தெரிவித்துள்ள இலக்கிய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், அறிவொளி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆா். இயேசுதாஸ் தலைமையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக் குழு உறுப்பினா் அ. முரளி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே. பிச்சைக்கண்ணு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் யு.எஸ். பொன்முடி உள்ளிட்டோா் எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜாவை சந்தித்து நூல்கள் வழங்கி பாராட்டும், நன்றியும் தெரிவித்தனா்.

மேலும், இந்த நூலகத்தை பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் நகரப் பகுதியில் விரைவில் அமைக்க வேண்டும் எனவும் அதில், இலக்கிய கூட்டங்கள் நடைபெற அரங்கமும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.