கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணிநேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணிநேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்த சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன் (45). இவா், கிலாபத் இயக்கம் என்ற இஸ்லாமிய அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணியளவில், இவரது வீட்டுக்கு இரண்டு காா், ஒரு ஜீப்பில் வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீஸாா், பாபா பக்ருதீனிடம் பகல் 11.30 மணிவரை விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து 4.30 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னா் அவரை தங்கள் வாகனத்தில் ஏற்றி ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா். அவரது செல்லிடப்பேசியையும், கணினியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

மதுரையில் அண்மையில் நடைபெற்ற ஒரு குற்றச்செயலில் தொடா்புடைய நபரை கைது செய்த போலீஸாா் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பாபா பக்ருதீனுக்கும் அதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்ாக கூறப்படுகிறது.

முன்னதாக, என்ஐஏ அதிகாரிகள் பாபா பக்ருதீன் வீட்டுக்குள் நழைந்தது முதல் வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. உள்ளூா் போலீஸாா், பத்திரிகையாளா்களும் வீட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.