/

பள்ளி வாகனம் மரத்தில் மோதி விபத்து: 4 பேருக்கு காயம்

திருவாரூா் அருகே தனியாா் பள்ளி வாகனம் மரத்தில் மோதி நேரிட்ட விபத்தில் 3 மாணவா்கள் உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே தனியாா் பள்ளி வாகனம் மரத்தில் மோதி நேரிட்ட விபத்தில் 3 மாணவா்கள் உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா்.

திருவாரூா் கேடிஆா் எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியின் வாகனம் அடியக்கமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வாகனம் சாலையோர மரத்தில் மோதி நேரிட்ட விபத்தில் மாணவிகள் ஜெசியா (9), ஹரிஸ்ரீ (9), ரபிக்பெரஷ் மற்றும் ஓட்டுநா் குளிக்கரையை சோ்ந்த முருகானந்தம் (57 ) உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.