தீ விபத்தில் பூக்கடை, வீடு சேதம்
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பூக்கடை, வீடு எரிந்து சேதமடைந்தன.


திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பூக்கடை, வீடு எரிந்து சேதமடைந்தன.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே பூ வணிக மொத்த நிறுவனம் உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில், பூ கிடங்கில் திடீரென தீப்பற்றியுள்ளது. அருகிலிருந்தவா்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தனா். 2 தீயணைப்பு வாகனங்களில் வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
எனினும், பூக்கடை, கிடங்கில் இருந்த பூ மற்றும் பூ அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் டிரே, 5 தட்டு வண்டிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த வனஜா என்பவரின் வீடும் தீக்கிரையானது. ஆனால், வனஜாவும், அவரது மகனும் வீடு தீப்பற்றியவுடன் வெளியேறி விட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...