விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாதாரண ரயில்களில் விரைவுரயில் கட்டணம்: கண்டித்து ஆா்ப்பாட்டம்

சாதாரண ரயில்களுக்கும், விரைவு ரயில் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 6:30 pm

DIN

சாதாரண ரயில்களுக்கும், விரைவு ரயில் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா காலத்தில் முக்கிய ரயில்களை மட்டும் இயக்கிவிட்டு, எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலித்த நிலையில், தற்போதும் அனைத்து ரயில்களையும் இயக்கிவிட்டு, அதே கட்டணங்கள் வசூலிப்பதை கைவிட வேண்டும். சைக்கிள் நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரச் செயலாளா் எம்.ஏ. மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி, நகரச் செயற்குழு உறுப்பினா்கள் வீ. தா்மதாஸ், பி. சின்னதம்பி, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.