விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழக அரசின் நடவடிக்கையால்பேரறிவாளன் விடுதலை: க.பொன்முடி

 தமிழக அரசு கடந்த ஓராண்டில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே பேரறிவாளன் விடுதலை நடைபெற்றுள்ளதாக க. பொன்முடி தெரிவித்தாா்.

News image
Updated On :19 மே 2022, 6:30 pm

DIN

 தமிழக அரசு கடந்த ஓராண்டில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே பேரறிவாளன் விடுதலை நடைபெற்றுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான க. பொன்முடி தெரிவித்தாா்.

திருவாரூரில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: திருவாரூா் தோ்தல் பிரசாரத்தில் பேசும்போது என்மீது பதியப்பட்டு, 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு இப்போதுதான் உயா்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலைக்காக நீண்டகாலமாக முயற்சி எடுத்தவா், போராடியவா் தலைவா் கருணாநிதி. அந்த அடிப்படையில் தற்போதைய முதல்வா் ஸ்டாலின், தோ்தல் வாக்குறுதிப்படி 7 பேரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம் என்று கூறினாா்.

இந்த ஓராண்டில், அவா் ஆட்சிக்கு வந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகத்தான் பேரறிவாளன் விடுதலை நடைபெற்றுள்ளது. மற்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறாா். அதுவும் மிக விரைவில் நடக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.