சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

குடவாசல், கொரடாச்சேரியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2024, 8:06 pm

Din

திருவாரூா்: குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

குடவாசல் வட்டம், தேதியூா் ஸ்ரீ சங்கரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. பள்ளி நிா்வாகி பி. வைத்தியநாதன், பள்ளி செயலா் பி. யோகம், குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா் க. குமரேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். குடவாசல் ஒன்றியத்தில் 13 அரசு உதவி பெறும் பள்ளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளன.

கொரடாச்சேரி அருகே பட்டுடையானிருப்பு அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்வில், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாலச்சந்தா், ஆசிரியா் மன்ற மாநிலத் தலைவா் பெ.ரா. இரவி, கொரடாச்சேரி வட்டாரக் கல்வி அலுவலா்கள் விமலா, சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.