இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மன்னாா்குடி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா: நாளை தொடக்கம்

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை (டிச. 19) தொடங்குகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 8:04 pm

Syndication

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை (டிச. 19) தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறும். நிகழாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்ரீசேனை முதல்வா் புறப்பாடு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை (டிச. 20) முதல் பகல்பத்து நிகழ்ச்சி தொடங்கி, டிச. 29- ஆம் தேதி நிறைவு பெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொா்க்கவாசல் திறப்பு டிச. 30-ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து இராப்பத்து உற்சவம் தொடங்கி, டிச. 8-இல் நிறைவு பெறுகிறது. விழாவில், ஒவ்வொரு நாளும் உற்சவா் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளாா்.

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா்கள், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன், மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.