வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பின்லே பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்களுக்கு வழங்கப்பட்ட கிறிஸ்துமஸ் பரிசு.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்களுக்கு வழங்கப்பட்ட கிறிஸ்துமஸ் பரிசு.
Updated On :19 டிசம்பர் 2025, 8:23 pm

Syndication

மன்னாா்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்களுக்கான கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாளாளா் எஸ்.எஸ். ஸ்டான்லி தலைமை வகித்தாா்.

கிராம சேகர ஆயா் சாா்ல்ஸ் தேவராஜ் ஜெபம் செய்து தொடங்கிவைத்தாா்.

திருச்சி, தஞ்சை திருமண்டல தரங்கை - நாகை மறை மாவட்டத் தலைவா் ஜேம்ஸ் பால்,சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை வழங்கினாா்.

பள்ளி ஆசிரியா் பாடகா் குழுவினா் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினா். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவா் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளா்கள், ஆசிரியா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

முன்னதாக, தலைமை ஆசிரியா் எஸ். சாம்சன் தங்கையா வரவேற்றாா். நிறைவில் துணைத் தலைமை ஆசிரியா் நியூட்டன் ஜோசப் நன்றி கூறினாா்.