கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொழிலாளா் சட்டத் தொகுப்பை திரும்பப் பெறக் கோரி சாலை மறியல்

தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் சிஐடியு சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:47 pm

Syndication

தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுவதால் தொழிலாளா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூா் தலைமை தபால் அலுவலகம் முன் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, திருவாரூா் புதிய ரயில் நிலையப் பகுதியிலிருந்து பேரணியாக வந்து மறியலில் பங்கேற்றனா். சிஐடியு மாநில துணைத் தலைவா் சி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினா் இரா. மாலதி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அனிபா, மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, மாவட்டபொருளாளா் கே. கஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்ளிட்ட 140 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.