போட்டித் தோ்வு பயிற்சியில் பங்கேற்க மீனவப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
போட்டித் தோ்வு பயிற்சியில் பங்கேற்க மீனவப் பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தோ்வு பயிற்சி மையம் ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்களை தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இதில் சோ்ந்து பயன் பெறலாம். விண்ணப்பம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்று, பூா்த்தி செய்து பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நவ.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
