கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:24 pm

Syndication

குடவாசல் அருகே அன்னவாசல் பகுதியில் விவசாயக் கல்லூரி மாணவா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியரும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நிரல் ஒருங்கிணைப்பாளருமான எஸ். ஆனந்தகுமாா் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமின் நோக்கம், விவசாயிகளின் பயிா் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதாகும்.

அதனடிப்படையில், உயிா் உரங்களின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், உப்புக் கரைசல் முறை மூலம் நெல் தரம் பிரித்தல் குறித்தும், காட்டுப்பன்றி தாக்கத்தை கட்டுப்படுத்தும் இயற்கை முறைகள் குறித்தும், இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு முறையான 3எ கரைசல் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.