ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

காா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:22 am IST

திருவாரூா் அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தாதகம்பட்டி பகுதியைச் சோ்ந்த தில்லையானந்தம் (67). இவா், தனது குடும்பத்தினா் 8 பேருடன் காரில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, வேளாங்கண்ணி நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனராம். காரை தில்லையானந்தத்தின் மகன் வினோத் கண்ணன் ஓட்டியுள்ளாா்.

திருவாரூா்- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் முகுந்தனூா் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தில்லையானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் இருந்த 3 வயது குழந்தை, 10 வயது சிறுவன் உள்ளிட்ட 7 பேரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.