இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

லஞ்சம்: வர்த்தகத் துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை

நிறுவனப் பதிவுக்குக் கையூட்டு பெற்ற வழக்கில் மத்திய வர்த்தக  அமைச்சகத்தின் மூன்று அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:43 pm

தினமணி

நிறுவனப் பதிவுக்குக் கையூட்டு பெற்ற வழக்கில் மத்திய வர்த்தக  அமைச்சகத்தின் மூன்று அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மத்திய வர்த்தக அமைச்சகத்தில் இணை ஆணையர் மன்மோகன் துபே, பிரிவு அலுவலர் ரோஷன் லால், உதவியாளர் ஜே.எம். நய்யார் ஆகியோர் தனியார் நிறுவன உரிமையாளர் அருண்குமார் சர்மாவிடம் ரூ.12 ஆயிரம் கையூட்டு கேட்டுப் பெற்றுள்ளனர்.

இது குறித்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கன்வல்ஜித் அரோரா கையூட்ட பெற்ற மத்திய வர்த்தகத் துறை அதிகாரிகள் மூன்று பேருக்கும் வெள்ளிக்கிழமை தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 எனினும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவதற்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.