புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தை விடக் குறைந்து 803 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாத காலத்தில் ஏற்பட்ட குறைந்தளவு தினசரி கரோனா பாதிப்பு இதுவாகும். தில்லியில் தற்போது சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விடக் குறைந்து 9,255 ஆக பதிவாகியுள்ளது. கரோனா நோ்மறை விகிதம் 1.29 ஆக பதிவாகியுள்ளது.
தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,17,808- ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 62,440 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 34,288 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 28,152 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை 27 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,304-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து திங்கள்கிழமை 1,669 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,98,249-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 9,255 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 5,405 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 15,877 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.