தலைநகர் தில்லியில் ரேஷன் அட்டை முறைகேடு விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: ரேஷன் அட்டை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்குத் தலைமை வகிக்கும் முதல்வர் கேஜரிவால் இந்த விவகாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பிறகும் மாவட்டக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள பாஜக எம்பிக்களும், ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த ரேஷன் அட்டை முறைகேட்டால் ஏழைகளுக்குக் கிடைத்திருக்க வேண்டிய ஆயிரக் கணக்கான டன் உணவுப் பொருள்கள் கிடைக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் தார்மிகப் பொறுப்பேற்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்றார் அஜய் மாக்கன். பேட்டியின் போது தில்லி முன்னாள் அமைச்சர் ஹாரூண் யுசுஃப் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








