எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ரேஷன் முறைகேட்டைக் கண்டித்து தில்லி பாஜக ஆர்பாட்டம்

தில்லி சட்டப்பேரவையில் செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையில்

Updated On :6 ஏப்ரல் 2018, 4:05 am IST

தில்லி சட்டப்பேரவையில் செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையில் தில்லி அரசின் ரேஷன் மோசடிகள் வெளிப்பட்டுள்ளதாகவும் அந்த மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி தில்லி சட்டப்பேரவைக்கு அருகே தில்லி பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தில்லி பாஜக பொதுச் செயலர் ராஜேஷ் பாட்டியா, பிரதேச அமைப்புப் பொதுச் செயலர் சித்தார்தன், தேசியச் செயலர் ஆர்.பி.சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீனாக்ஷி லேகி, ரமேஷ் பிதூரி , உதித் ராஜ், தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, பிரதேச செயலர் ரவீந்தர் குப்தா, பிரதேச நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜெய் பிரகாஷ், அபய் வர்மா, மோகன் சிங் பிஸ்ட், ராஜீவ் பாபர், ஜோகிதா சிங், விக்ரம் பிதூரி, கஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தில்லி பாஜக பொதுச் செயலர் ராஜேஷ் பாட்டியா பேசுகையில், "அரவிந்த் கேஜரிவால் மீது நம்பிக்கை வைத்து தில்லி மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர். 
ஆனால், அவர் ஏழை மக்களின் ரேஷன் பொருள்களைக் கொள்ளை அடித்துள்ளார். ரேஷன் மோசடி விவகாரத்தில் அரவிந்த் கேஜரிவாலுக்கு தண்டனை கிடைக்க தில்லி பாஜக தொடர்ந்து போராடும்' என்றார்.
புது தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மீனாக்ஷி லேகி பேசுகையில், "மத்திய அரசால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் தில்லி முதல்வருக்கு நெருக்கமான ரேஷன் மாபியாவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் ரூ.5,400 கோடி மதிப்பிலான ரேஷன் மோசடி நடைபெற்றுள்ளது' என்றார். 
தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரமேஷ் பிதூரி பேசுகையில், "ரேஷன் பொருள் மோசடியில் ஆம் ஆத்மி அரசின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. 
நேர்மை தொடர்பாக மற்றவர்களுக்குப் பாடம் எடுத்த ஆம் ஆத்மியினரின் உண்மை முகத்தை தில்லி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆம்ஆத்மியினரின் மோசடியால் தில்லி சட்டப்பேரவையின் மாண்பு குலைந்துள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.