‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தில்லி மெட்ரோ 4-ஆவது விரிவாக்கத் திட்டம்: தில்லி அமைச்சரவை ஒப்புதல்

தில்லி மெட்ரோ ரயிலின் நான்காவது விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு தில்லி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தில்லி மெட்ரோ ரயிலின் நான்காவது விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு தில்லி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியது:
மிக நீண்ட போராட்டத்துக்கு பிறகு, தில்லி மெட்ரோ ரயிலின் 4-ஆவது விரிவாக்கத் திட்ட பணிகளுக்கு தில்லி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
இந்தத் திட்டத்தின் கீழ், ரிதாலா - பவானா இடையிலான 21 கி.மீட்டர், மேற்கு ஜனக்புரி - ஆர்.கே. புரம் இடையிலான 28 கி.மீட்டர், இந்திரலோக் - இந்திர பிரஸ்தா இடையிலான 13 கி.மீட்டர், முகுந்த்பூர் - மெளஜ் பூர் இடையிலான 12.5 கி.மீட்டர், ஏரோசிட்டி -துக்ளகாபாத் இடையிலான 20 கி.மீட்டர், லாஜ்பத் நகர் - சாகேத் இடையிலான 8 கி.மீட்டர் என மொத்தம் 104 கி.மீட்டர் அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும். 
இந்தப் பணிகள் ரூ. 46 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் தில்லி அரசின் பங்களிப்பு ரூ. 9,700 கோடியாக இருக்கும். இந்தத் திட்டப் பணிகளை 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்தப் பேட்டியின்போது தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், அரசின் செய்தித் தொடர்பாளர் நாகேந்திர சர்மா உடனிருந்தனர்.
இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது சுட்டுரையில், "4-ஆவது கட்ட தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், 6 காரிடர்களுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 103.93 கி.மீட்டர் தூரம் மேற்கொள்ளவுள்ள இத்திட்டத்தின் கீழ் 79 புதிய மெட்ரே ரயில் நிலையங்கள் கூடுதலாக அமையும்' எனத் தெரிவித்துள்ளார். 


தில்லி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இதேபோன்று, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில், "இது தில்லிக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றில் புரட்சிகர மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம். இப்போது போக்குவரத்துத் துறையிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. இதனால், காற்று மாசு குறையும். உலகின் மிகச் சிறந்த நகரங்களில் தில்லியும் இடம் பெற வேண்டும் என்பதே எனது கனவாகும். இது குறித்து தில்லியில் வாழும் ஏழைகள், வசதிப்படைத்தவர்கள் பெருமையடைய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.


இடங்கள்        தூரம்
ரிதாலா - பவானா ....................................     21 கி.மீ.
மேற்கு ஜனக்புரி - ஆர்.கே. புரம்..............    28 கி.மீ.
இந்திரலோக் - இந்திர பிரஸ்தா................    13 கி.மீ.
முகுந்த்பூர் - மெளஜ் பூர்........................    12.5 கி.மீ.
ஏரோசிட்டி - துக்ளகாபாத்........................    20 கி.மீ.
லாஜ்பத் நகர் - சாகேத்................................ 8 கி.மீ.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.