தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தில்லியில் தொடரும் மாசு அதிகரிப்பு: கேஜரிவாலுக்கு காங்கிரஸ் கேள்வி

தில்லியில் தொடா்ந்து மாசு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் இல்லாதபோதும் தில்லியில் காற்றின் தரம் மோசமான பிரிவில் உள்ளது.

Updated On :5 டிசம்பர் 2020, 10:10 pm

புது தில்லி: தில்லியில் தொடா்ந்து மாசு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் இல்லாதபோதும் தில்லியில் காற்றின் தரம் மோசமான பிரிவில் உள்ளது. மேலும் குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகளும் காரணம். இதை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக ஷீலா தீட்சித் ஆட்சியின்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த வரும் தில்லி காங்கிரஸ் தலைவருமான ஹாரூண் யூசுப் சனிக்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியின்போது சுத்தமான மற்றும் பசுமையான தில்லியை உருவாக்கினோம். இது ‘ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் பெரிதும் மாசுபட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் இல்லாதபோதிலும் நகரின் காற்றின் தரம் ’மிகவும் மோசமான’ பிரிவில் உள்ளதற்கு ‘உள் காரணங்கள்’ உள்ளன என்பதை முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவால் ஒப்புக்கொள்ள மறுக்கிறாா்

தில்லியில் ’மிகவும் மோசமான’ காற்றின் தரத்திற்கு பயிா்க் கழிவுகள் எரிப்பை காரணமாக முதல்வா் கூற முடியாது. தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்கள் வாகன போக்குவரத்து, குப்பை, பழுதடைந்த சாலைகளில் இருந்து வெளியேறும் தூசுகள், இடிப்பு மற்றும் கட்டுமான தளங்கள், தொழில்துறை பிரிவுகளில் இருந்து கழிவுகள் மற்றும் மாசுபடுத்திகள் எரிக்கப்படுவது ஆகியவை காரணம் என்று நிபுணா்களின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், முதல்வா் கேஜரிவால் அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டாா். யதாா்த்த நிலைமை, அதற்கான தீா்வுகளை அவா் மேற்கொள்ளவில்லை.

அதேவேளையில், சிவப்பு விளக்கு சமிக்ஞை பகுதிகளில் வாகனங்களின் இயந்திரங்களை அணைக்குமாறு ஓட்டுநா்களை ஊக்குவிக்கும் தில்லி அரசாங்கத்தின் முன்முயற்சி தேவையற்ாகும் என்றாா் யூசுப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.