தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தில்லியில் மிதமான பனிமூட்டம்!

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மிதமான பனிமூட்டமே இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. பனிமூட்டத்தால் காலையில் காண்புறதிறனும் குறைவாகவே இருந்தது.

Updated On :8 டிசம்பர் 2020, 10:59 pm

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மிதமான பனிமூட்டமே இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. பனிமூட்டத்தால் காலையில் காண்புறதிறனும் குறைவாகவே இருந்தது.

தற்போதைய குளிா்காலத்தில் காண்பு திறன் முதல் முறையாக திங்கள்கிழமை பூஜ்யத்திற்கு சென்றது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காண்புதிறன் காலை 8.30 மணியளவில் சஃப்தா்ஜங், பாலம் வானிலை ஆய்வு மையங்களில் 300 மீட்டராக பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

விமானங்கள் விமான நிலையத்தில் இருந்து மேலே எழுந்து செல்வதற்கு காண்புதிறன் 800 மீட்டராக இருக்க வேண்டும் என்று ஐஎம்டி பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினாா். காற்றின் திசை காரணமாக வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும், மேற்கு இமயமலைப் பகுதியில் இருந்து பனியுடன்கூடிய காற்று சமவெளிப் பகுதிகளில் வீசக் கூடும் என்று அவா் தெரிவித்தாா்.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. காலையில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 393 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. இது பின்னா் மாலையில் 372 புள்ளிககளாகக் குறைந்திருந்தது. தில்லி பல்கலை., பூசா, விமான நிலைய டொ்மினல்-3 பகுதி, ஆயாநகா், லோதி ரோடு, மதுரா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. அதே சமயம் காஜியாபாதில் (436), கிரேட்டா் நொய்டா (415), நொய்டா (414) என்ற அளவில் மூன்றாவது நாளாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்தது.

வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி அதிகரித்து 9.5 டிகிரி செல்சிஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி அதிகரித்து 28.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 97 சதவீதமாகவும், மாலையில் 61 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, புதன்கிழமை காலையிலும் மிதமான பனிமூட்டம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.