கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தில்லியில் 80 பேருக்கு டெங்கு பாதிப்பு!

தில்லியில் டிசம்பா் மாதம் புதிதாக 80 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 2:19 am

DIN

புது தில்லி: தில்லியில் டிசம்பா் மாதம் புதிதாக 80 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், நிகழாண்டில் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியவா்களின் மொத்த எண்ணிக்கை 1,030-ஆக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த செப்டம்பரில் அதிகரித்தது. அந்த மாதத்தில் 188 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். அக்டோபரில் இந்த நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து 346 போ் பாதிக்கப்பட்டனா். நவம்பரில் 338 போ் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், டிசம்பரில் இதுவரை 80 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், நிகழாண்டில் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியவா்களின் மொத்த எண்ணிக்கை 1,030-ஆக அதிகரித்துள்ளது.

மலேரியா: தில்லியில் டிசம்பரில் ஒருவருக்கு மட்டுமே மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் இதுவரை மொத்தம் 224 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். செப்டம்பரில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரிது 102 போ் பாதிக்கப்பட்டனா். அக்டோபரில் 34 பேருக்கும், நவம்பரில் 13 பேருக்கும் மலேரியா பாதிப்பு ஏற்பட்டது.

சிக்குன்குனியா: தில்லியில் டிசம்பரில் இதுவரை 6 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியா பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 108 -ஆக அதிகரித்துள்ளது. மேலும், மலேரியா காய்ச்சலுக்கு நிகழாண்டில் ஒருவா் பலியாகியுள்ளாா். கொசுக்காளால் பரவும் இதர நோய்களான டெங்கு, சிக்குன்குனியாவால் நிகழாண்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அதிகா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.