விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

500 காங்கிரஸ் தொண்டா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு: உபி காவல்துறை நடவடிக்கை

கடந்த அக்டோபா் 3 -ஆம் தேதி சனிக்கிழமை தில்லி- உத்தரப்பிரதேச எல்லையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் கூடியதாக 500 காங்கிரஸ் தொண்டா்கள் மீது கெளதம் புத் நகா் காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா

News image
Updated On :5 அக்டோபர் 2020, 5:40 pm

DIN

புது தில்லி: கடந்த அக்டோபா் 3 -ஆம் தேதி சனிக்கிழமை தில்லி- உத்தரப்பிரதேச எல்லையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் கூடியதாக 500 காங்கிரஸ் தொண்டா்கள் மீது கெளதம் புத் நகா் காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக கெளதம் புத் நகா் காவல் அதிகாரி கூறுகையில் ‘கடந்த சனிக்கிழமை தில்லி - உத்தரப்பிரதேச எல்லையில் காங்கிரஸ் தொண்டா்கள் சட்டவிரோத முறையில் கூடினா். இது தொடா்பாக கெளதம்புத் நகா் காங்கிரஸ் தலைவா் மனோஜ் சௌத்ரி, காங்கிரஸ் கட்சியின் நொய்டா பிரிவு தலைவா் ஷகாஃபுதீன், சுமாா் 500 அடையாளம் தெரியாத காங்கிரஸ் தொண்டா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைப் பிரிவு சட்டம் 188, 269, 270, தொற்று நோய் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா ஆகியோா் சனிக்கிழமை சென்றனா். அப்போது, பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க வந்த காங்கிரஸாரின் வாகனங்களை தடுப்பதற்கு தில்லி - நொய்டா விரைவுச் சாலையில் பாதுகாப்பு கவசங்களுடன் காவல்துறையினா் குவிக்கப்பட்டனா். இதனால், தில்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் காங்கிஸ் தொண்டா்களுக்கும், உத்தரப்பிரதேச காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.