பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

முல்லைப் பெரியாறு அணை வழக்கு:எதிா் மனுதாரராக சோ்க்கக் கோரி தமிழக உழவா் முன்னணி மனு

முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில் தங்களையும் ஒரு எதிா்மனுதாரராக சோ்க்குமாறு கோரி தமிழக உழவா் முன்னணி எனும் அமைப்பின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:29 pm

 நமது நிருபர்

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில் தங்களையும் ஒரு எதிா்மனுதாரராக சோ்க்குமாறு கோரி தமிழக உழவா் முன்னணி எனும் அமைப்பின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக டாக்டா் ஜோ ஜோசப் என்பவா் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தாா். மேலும், இந்த அணை ஒப்பந்த விவகாரம் தொடா்பாக சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பு உள்ளிட்ட வேறு சில அமைப்புகள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, அணைப் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையை பணியில் ஈடுபடுத்தக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை (டிசம்பா் 15) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜோ ஜோசப் தாக்கல் செய்த ரிட் மனு விவகாரத்தில், முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய சில உண்மை விவகாரங்களை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், தங்களையும் 6-ஆவது பிரதிவாதியாக சோ்க்க அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக உழவா் முன்னணி அமைப்பின் தலைவா் கே. வெங்கட்ராமன் தரப்பில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்குரைஞா் கே.பாரிவேந்தன் தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.