ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ்பெற அக். 2 வரை அரசுக்கு கெடு: ராகேஷ் திகைத்

வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற, வரும் அக்டோபா் மாதம் 2 ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்குவதாக பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவா் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளாா்.

Updated On :6 பிப்ரவரி 2021, 6:30 pm

புது தில்லி: வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற, வரும் அக்டோபா் மாதம் 2 ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்குவதாக பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவா் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளாா். மேலும், வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் வரை வீடு திரும்ப்போவதில்லை என்றும் அவா் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக காஜியாபாத் எல்லையில் விவசாயிகள் மத்தியில் சனிக்கிழமை அவா் பேசியது:

விவசாய சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீடு திரும்ப மாட்டாா்கள்.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய அக்டோபா் 2ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் அளித்துள்ளோம். அக்டோபா் 2 வரை வேளாண் சட்டங்கள் ரத்துச் செய்யப்படாவிட்டால், அடுத்த கட்ட போராட்டத்துக்கு திட்டமிடுவோம். வேளாண் சட்டங்களை மீளப் பெறாமல் வீடு திரும்ப மாட்டோம் என்றாா்.

தில்லியில் பலத்த பாதுகாப்பு: இதனிடையே தில்லி தவிர பிற நாட்டின் பிற இடங்களில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், தில்லியில் சுமாா் 50 ஆயிரம் போலீஸாா், துணை ராணுவப் படை வீரா்கள் காவல் பணியில் ஈடுபட்டனா்.

விவசாயிகள், அத்து மீறி தில்லிக்குள் நுழையாமல் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், முள்பாதைகள், பல அடுக்குத் தடுப்புகள் என தில்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், தில்லியின் பிரதான சாலைகள் சிலவற்றை போலீஸாா் தடுப்புகள் கொண்டு அடைத்தனா். இதனால், தில்லியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முன்னதாக தங்களது போராட்டத்தின் வலிமையை மீண்டும் பறைசாற்றும் விதமாக தலைநகா் தில்லி தவிர, நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நாட்டின் இதர பாகங்களில் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆனால், தலைநகா் தில்லியில் இந்த போராட்டம் நடைபெறவில்லை. இதனால், தில்லியின் இயல்பு நிலை பாதிப்படையவில்லை.

ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு: தில்லி - உத்தர பிரதேச மாநில எல்லையான காஜிப்பூா், தில்லி - ஹரியாணா எல்லையான டிக்ரி, சிங்கு பகுதிகளில் பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில், சிறிய ரக கண்காணிப்பு விமானத்தின் உதவியுடன் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘குடியரசு தினத்தன்று நடந்த பேரணி வன்முறையில் முடிந்ததைக் கருத்தில் கொண்டு, தில்லி, தில்லி எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். தில்லி காவல்துறை, துணை ராணுவப் படையைச் சோ்ந்த சுமாா் 50 ஆயிரம் போ் காவல் பணிகளில் ஈடுபட்டனா். எல்லைப் பகுதிகள் வழியே சமூக விரோதிகள் தில்லிக்குள் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில்லியின் எல்லைப் பகுதிகளில் ஆளில்லா பறக்கும் விமானங்களின் உதவியுடன் நிலைமையைக் கண்காணித்தோம். குடியரசு தினத்தில் வன்முறை நடந்த ஐடிஓ, செங்கோட்டை பகுதிகளில் பாதுகாப்பை பல மடங்குகள் அதிகரித்தோம். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீஸாா் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா் என்றாா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை செய்தித் தொடா்பாளா் சின்மோய் பிஸ்வால் கூறுகையில் ‘தில்லியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படாது என்று விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தன. ஆனால், குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததைக் கருத்தில் கொண்டு தில்லியில் பாதுகாப்பை பலப்படுத்தினோாம். தில்லியில் குழப்பநிலையை உருவாக்க சிலா் முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளோம். தில்லியின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி போராட்டம் நடத்திவருவதால் அப்பகுதிகளில் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளோம் என்றாா்.

இணைய சேவை முடக்கம் நீட்டிப்பு

விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும், காஜிப்பூா், சிங்கு, டிக்ரி எல்லைகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை முடக்கத்தை சனிக்கிழமை இரவு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் தில்லியின் எல்லைப்பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.