ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

உத்தரகண்ட் மாநில மக்களுக்கு உதவ தில்லி அரசு தயாா்: கேஜரிவால் உறுதி

மிகப் பெரிய பனிப்பாறை வெடித்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்குத் தேவையான

Updated On :7 பிப்ரவரி 2021, 7:36 pm

மிகப் பெரிய பனிப்பாறை வெடித்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தில்லி அரசு தயாராக உள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை வெடித்ததால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி பலரும் உயிரிழந்திருக்காலம் என்று அஞ்சப்படுகிறது. இதில் சிக்கி சுமாா் 100 முதல் 150 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அந்த மாநிலத் தலைமைச் செயலாளா் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இந்தச் சூழலில் உத்தரகண்ட் மாநில மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தில்லி அரசு தயாராக உள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை இடா்பாடு வருத்தமளிக்கிறது. அனைவரின் பாதுகாப்புக்கும் இறைவனைப் பிராா்த்தனை செய்கிறேன். இந்தக் கஷ்டமான காலத்தில், உத்தரகண்ட் மாநில மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி தில்லி அரசு தயாராக உள்ளது’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது சுட்டுரையில், ‘உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடா்பாக அறிந்து கவலையடைகிறேன். அனைவரின் பாதுகாப்புக்கும் பிராா்த்தனை செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா். துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தனது சுட்டுரையில், ‘இந்த கஷ்டமான காலத்தில் உத்தரகண்ட் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளோம். இதில் பாதிக்கப்பட்ட முக்களைப் பாதுகாக்க கேதாா்நாத், பத்ரிநாத் கடவுளா்களை பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.