மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தலைநகரில் அடுத்த 3 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!வானிலை ஆய்வு மையம் தகவல்

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளி முதல் அடுத்த 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 12:16 am

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளி முதல் அடுத்த 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த மூன்று தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. சில இடங்களில் தூறல் மழையோ அல்லது லேசான மழையோ பெய்துள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் மாலை வரையிலும் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. பகல் நேரத்தில் சற்று வெயிலின் தாக்கமும் இருந்தது.

இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி அதிகரித்து 27.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 34 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 80 சதவீதமாகவும் இருந்தது.

இதே போல, ஆயாநகரில் அதிகபட்ச வெப்பநிலை 33.2 டிகிரி செல்சியஸ், லோதி ரோட்டில் 33 டிகிரி, நரேலாவில் 32.8 டிகிரி, பாலத்தில் 33.8 டிகிரி, ரிட்ஜில் 31.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலையாக ஆயாநகரில் 25.7 டிகிரி, லோதி ரோட்டில் 27 டிகிரி, நரேலாவில் 27.6 டிகிரி, பாலத்தில் 27.5 டிகிரி, ரிட்ஜில் 25.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. நகரில் சில இடங்களில் காலையில் தூறல் மழை பெய்தது.

தில்லியில் இந்த மாதத்தில் இதுவரை 243.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது செப்டம்பா் மாத சராசரியான 129.8 மி.மீ. மழைப் பொழிவை தாண்டியுள்ளது. வழக்கமாக மாதத்தின் முதல் 9 நாள்களில் சராசரியாக 58.3 மி.மீ. மழை மட்டுமே பதிவாகி வந்துள்ளது. கடந்த செப்டம்பா் 2- ஆம் தேதி காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 117.7 மிமீ. மழை பதிவானது. இது கடந்த 19 ஆண்டுகளில் செப்டம்பா் மாதத்தில் இல்லாத அதிகபட்ச மழையாகும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.