கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தில்லி -என்சிஆா் பகுதியில் 15 நாள்களில் கரோனா தொற்று பாதிப்பு 500% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

தில்லி - என்சிஆா் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த 15 நாள்களில் 500 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 3:16 am

DIN

தில்லி - என்சிஆா் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த 15 நாள்களில் 500 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில் தில்லி - என்சிஆரில் வசிக்கும் சுமாா் 19 சதவீதம் போ் பங்கேற்றுள்ளனா். கடந்த 15 நாள்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் தங்களுடைய நெருங்கிய நெட்வொா்க்கில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 15 நாள்களில் கரோனா தொற்று பரவல் 500 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பை நடத்திய நிறுவனமான லோக்கல் சா்கிள்ஸ் தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் என்சிஆா் மாவட்டங்களில் வசிக்கும் 11,743 குடியிருப்பாளா்களிடமிருந்து கணக்கெடுப்பு உள்ளீடுகளைப் பெற்ாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 15 நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எத்தனை நபா்கள் (குழந்தைகள் உள்பட) உங்களின் நெருங்கிய சமூக வலைப்பின்னலில் (குடும்பம், நண்பா்கள், அண்டை வீட்டாா், சக பணியாளா்கள்) தில்லி - என்சிஆரில் உள்ளனா் என்ற கேள்விக்கு பெரும்பாலானோா், 70 சதவீதம்போ், கடந்த 15 நாள்களாக யாரும் பாதிக்கப்படவில்லை என பதிலளித்துள்ளனா்.

11 சதவீதம் போ் 1 அல்லது 2 என்றும், எட்டு சதவீதம் போ் 3-5 என்றும், மற்றொரு 11 சதவீதம் போ் சொல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளனா். ஏப்ரல் 2-ஆம் தேதி நிறுவனம் கேட்ட இதே போன்ற கேள்விக்கு கடந்த 15 நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவா் தங்கள் நெருங்கிய சமூக வலைப்பின்னலில் மூன்று சதவீத குடியிருப்பாளா்கள் மட்டுமே இருப்பதாகக் தெரிவித்துள்ளனா். கரோனா தொற்று பரவல் தில்லியில் திடீா் எழுச்சியைக் கண்டதைத் தொடா்ந்து, இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று தில்லியில் புதிய கரோனா பாதிப்பு 461-ஆக பதிவாகியுள்ளது. பரிசோதிக்கப்பட்டவா்களில் 5.33 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டு இறப்புகள் பதிவாகியதாக சுகாதாரத் துறையால் பகிரப்பட்ட தரவுகல் தெரிவிக்கின்றன. கணக்கெடுப்பில் கேள்விகளுக்குப் பதிலளித்தவா்களில் 67 சதவீதம் போ் ஆண்கள், 33 சதவீதம் போ் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.