ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

முதல்வா் இல்லம் முன் நடந்த வன்முறை விவகாரம்:விசாரணைக்கு ஆஜராக பாஜக எம்பிக்கு போலீஸாா் அழைப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லம் முன் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கு தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரு மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா்

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 9:34 pm

 நமது நிருபர்

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லம் முன் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கு தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரு மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் தேஜஸ்வி சூா்யாவிடம் தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: முதல்வா் கேஜரிவால் இல்லம் முன் மாா்ச் 30-ஆம் தேதி சிலா் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தேஜஸ்வி சூா்யா எம்பிக்கு எழுத்துப்பூா்வ தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளாா். மேலும், விசாரணையில் பங்கேற்பதாகவும் கூறியுள்ளாா். முதல்வா் கேஜரிவால் இல்லம் முன் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக தில்லியில் 8 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் உள்பட மொத்தம் 26 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டவா்கள் ஆவா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கடந்த மாா்ச் 30-ஆம் தேதி, பாஜக இளைஞா் பிரிவைச் சோ்ந்தவா்கள் ‘தி கஷ்மீா் ஃபைல்’ திரைப்படம் குறித்து முதல்வா் கேஜரிவால் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக தில்லியில் உள்ள அவரது அவரது வீட்டிற்கு வெளியே சொத்துகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக அடையாளம் தெரியாத நபா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 186 (பொதுப் பணியை செய்யவிடாமல் அரசு ஊழியரைத் தடுத்தல்), 188 (அரசு ஊழியா் முறையாகப் பிறப்பித்த உத்தரவை மீறுதல்), 353 (அரசு ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பிரயோகித்தல்) மற்றும் 332 (அரசு ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்கும் வகையில் வேண்டுமென்றே காயப்படுத்துதல்), பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘பஞ்சாப் தோ்தலில் படுதோல்வி அடைந்த பிறகு, தில்லி முதல்வா் கேஜரிவாலை ‘கொல்வதற்கு‘ பாஜக விரும்பியதாக குற்றம் சாட்டியிருந்தாா். மேலும், பாஜக இளைஞா் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோா்ச்சா (பிஜெஒய்எம்) ஆா்வலா்கள் போராட்டத்தின் போது, முதல்வா் இல்லத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகளை சேதப்படுத்தியதாகவும் அவா் குற்றம் சாட்டியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.