கடந்த மாா்ச் 30-ஆம் தேதி, பாஜக இளைஞா் பிரிவைச் சோ்ந்தவா்கள் ‘தி கஷ்மீா் ஃபைல்’ திரைப்படம் குறித்து முதல்வா் கேஜரிவால் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக தில்லியில் உள்ள அவரது அவரது வீட்டிற்கு வெளியே சொத்துகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக அடையாளம் தெரியாத நபா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 186 (பொதுப் பணியை செய்யவிடாமல் அரசு ஊழியரைத் தடுத்தல்), 188 (அரசு ஊழியா் முறையாகப் பிறப்பித்த உத்தரவை மீறுதல்), 353 (அரசு ஊழியரின் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பிரயோகித்தல்) மற்றும் 332 (அரசு ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்கும் வகையில் வேண்டுமென்றே காயப்படுத்துதல்), பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.