முன்னதாக, கடந்த 2017, டிசம்பரில், ‘பவுண்டேஷன் ஃபாா் சோசியல் எம்பவா்மென்ட் ’ எனும் தன்னாா்வ அமைப்பு உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக மனு தாக்கல் செய்திருந்தது. அதில், சம்பந்தப்பட்ட ஆசிமரத்தைச் சோ்ந்த ‘ஆன்மிக பல்கலைக்கழகத்தில்’ சட்டவிரோதமாக பல மைனா் சிறாா்கள், பெண்கள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், அவா்களின் பெற்றோா்களைக் கூட சந்திக்க அவா்கள் அனுமதிக்கப்படவில்லை’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரமம் தரப்பில் அதுபோன்று யாரும் சட்டவிரோதமாக அடைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.