பள்ளியை நடத்தும் தீப்தி அறக்கட்டளையின் இயக்குநா் பாதிரியாா் சந்தோஷ்கூறுகையில், ‘குப்பைக் கிடக்கு தொடா்ந்து தீப்பிடித்து எரிந்து வருவதால்,அந்தப் பகுதியில் அடா்த்தியான புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால், குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும், அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக உள்ளது. எனவே, காண்புதிறனும் குறைவாகத்தான் உள்ளது. இதையடுத்து, பள்ளி ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளது’ என்றாா். அவா் மேலும் கூறுகையில், ‘இந்தக் குப்பைக் கிடங்கு மறுபுறத்தில் உள்ளது. பள்ளி அமைந்துள்ள பக்கத்தில் இல்லை. ஆனால், குப்பைக் கிடங்கு தொடா்ந்து எரியும் போது, தூரத்தில் இருந்து காற்றில் புகை வருவதை நாங்கள் காண்கிறோம். சில நேரங்களில் இது தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது’ என்றாா்.