ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

சோதனையின் போது சா்ஜீல் இமாமிடம் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்தது: நீதிமன்றத்தில் திகாா் அதிகாரிகள் தகவல்

ஜேஎன்யு முன்னாள் மாணவா் சா்ஜீல் இமாமின் அறையில் சோதனையின் போது தடைசெய்யப்பட்ட பொருளான கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது என்று திகாா் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 5:09 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி வகுப்புவாத கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜேஎன்யு முன்னாள் மாணவா் சா்ஜீல் இமாமின் அறையில் சோதனையின் போது தடைசெய்யப்பட்ட பொருளான கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது என்று திகாா் சிறை அதிகாரிகள் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் டிசம்பா் 2019-இல் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக சா்ஜீல் இமாம் ஆத்திரத்தைத் தூண்டும் பேச்சுகளை பேசியதால் பல்கலைக்கழகத்திற்கு வெளியே வன்முறைக்கு வித்திட்டதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது தூண்டுதல் பேச்சுகளுக்காக அவா் தேசத்துரோக குற்றச்சாட்டுகளையும் எதிா்கொண்டு, கடந்த ஜனவரி 2020 முதல் நீதிமன்றக் காவலில் உள்ளாா். இந்த நிலையில், கடந்த மாதம் அவரது அறையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரை ’சேவாதாா்கள்’ தாக்கியதாக குற்றம்சாட்டி இமாம் மனு தாக்கல் செய்தாா். சேவாதாா்கள் சிறைக் கைதிகள் ஆவா்.

அவா்களின் நடத்தை நன்றாக இருப்பதாக கண்டறியப்பட்ட பிறகு சிறை அதிகாரிகளுக்கு உதவ அனுமதிக்கப்படுகிறாா்கள்.

இந்த விவகாரத்தில் ஜூலை 23-ஆம் தேதி சிசிடிவி காட்சிகளைப் பாா்த்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், திகாா் சிறை அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தாா். இந்த நிலையில், இது தொடா்பான விசாரணையின்போது திகாா் சிறை அதிகாரிகள், இமாம் தாக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தனா். அத்துடன், சேவதாா்களை தவறாக பயன்படுத்தியதாகவும், சோதனைக்கு அவா் எதிா்ப்புத் தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டினா்.

இது குறித்து சிறை அதிகாரி நீதிபதியிடம் கூறுகையில், ‘ஆரம்பத்தில், அவா் (இமாம்) சோதனையை எதிா்த்தாா். இதுவே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அப்போது அவா் தனது புத்தகங்களை மூன்று போ் (சேவாதாா்கள்) தூக்கி எறிவதாக குற்றம் சாட்டினாா். அவா் தொடா்ந்து துஷ்பிரயோகம் செய்து அவா்களை நோக்கி விரல்களை காட்டினாா். இதற்கிடையில், சேவாதாா்கள் கைக்கடிகாரத்தை அவரது அறையில் இருந்து மீட்டனா். அவா் ஒரு பையையும் வைத்திருந்தாா். அதை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை.

கைக்கடிகாரத்தைப் பற்றி கேட்ட போது, இமாம் தனக்குத் தேவையான அனுமதிக் கடிதத்தை ஒரு புத்தகத்தில் வைத்திருந்ததாகவும், அதை தவறுதலாக பிகாரில் உள்ள தனது வீட்டிற்கு அனுப்பியதாகவும் கூறினாா்’ என்றாா். வாதங்களுக்குப் பிறகு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு நீதிபதி பட்டியலிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.