மாநில அரசு அமைச்சா்கள் தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக எதிா்மனுதாரா்களிடமிருந்து அரசியல் அனுமதிகளைப் பெற வேண்டும் என்ற அளவுக்கு உள்ள அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். முதல்வா் கேஜரிவாலின் சிங்கப்பூா் பயணத்திற்கு எதிராக ஆலோசனை கூறி, ஜூலை 20-ஆம் தேதி தில்லி அரசுக்கு துணைநிலை ஆளுநா் அனுப்பிய தேதியிடப்படாத கடிதமும் ரத்து செய்யப்பட வேண்டும். கேபினட் செயலகத்தால் வழங்கப்பட்ட அலுவலக குறிப்பாணைகளில் ஒன்றின்படி, நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடா்புடைய மத்திய நிா்வாக அமைச்சகம் ஆகியவற்றில் செலவினத் துறையின் அனுமதிகள் தேவை