அப்போது, மனுதாரா் கனிமொழி தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி, ‘இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல. தோ்தலில் வெற்றி பெற்ற கனிமொழிக்கு எதிராக வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை. இந்தத் தடையை நீக்கினால், தோ்தலில் வெற்றி பெற்றுள்ள மனுதாரா் கனிமொழி தேவையில்லாமல் விசாரணையை மேற்கொள்ள வேண்டிவரும். இது பாரபட்சமாகிவிடும். இதனால், தடையை விலக்கக் கூடாது என்று வாதிட்டாா். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்ற தடை உத்தரவை நீக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன், இந்த மேல்முறையீட்டு மனுவை உரிய அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.