இந்த மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றத்தின் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த 2018-இல் உத்தரவிட்டாா். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று, எடப்பாடி கே. பழனிசாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை 2018-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை டெண்டா் ஒப்பந்த முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நவம்பா் 29-ஆம் தேதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. அதன் பிறகு இந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.