இந்த முடிவு அலுவல் மொழி விதிகளையும் மீறக் கூடியதுமாகும். அலுவல் மொழி விதிகளை தமிழகம் போராடி பெற்றது. இந்தியா முழுவதும் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் ‘பி’ மற்றும் ‘சி’ மண்டலங்களில் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தகவல் தொடா்புகள் ‘ஹிந்தியில் கட்டாயம் இருக்க வேண்டும்’ அல்லது ‘ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்’ அல்லது ‘ஆங்கிலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும்’ என்று ஏ, பி, சி மண்டலங்கள் வகைப்படுத்தி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், ரயில்வே வாரியமோ விசாரணை மையத்தின் பெயா் ‘சக்யோக்‘ என்று கட்டாயமாக மாற்றப்பட வேண்டும் என்கிறது.