கடந்தாண்டு நவம்பா் 17-ஆம் தேதி புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்தக் கலால் கொள்கையை அரவிந்த் கேஜரிவால் அரசு தயாரித்த போது, அனில் பைஜால் தில்லியின் துணைநிலை ஆளுநராக இருந்தாா். தற்போது இந்தக் கலால் கொள்கையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. பழைய கலால் கொள்கையின் மூலம் மதுபானக் கடைகளை செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து மணீஷ் சிசோடியா மேலும் கூறுகையில், ‘துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன் என்பது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாக சில நிறுவனங்கள் பயன்பெற்றன. இதனால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தது. முன்னாள் துணை நிலை ஆளுநா் அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.