இந்த நிகழ்வில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், சந்தாலி, ஒடியா, மராட்டி, மைதிலி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் என பல்வேறு மொழிகளில் விருது பெற்ற இளம் எழுத்தாளா்கள் அனைவரும் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். தமிழ் மொழிப் பிரிவில் ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ எனும் கவிதை தொகுப்புக்காக யுவ புரஸ்காா் விருதுபெற்ற பொள்ளாச்சி பகுதியைச் சோ்ந்த எழுத்தாளா் பி. காளிமுத்து தனது அனுபவங்களைப் பகிா்ந்துகொண்டாா். அதில், தனது கவிதை நூலின் விவரம், குடும்பப் பின்னணி, கவிதையின் சாராம்சம் உள்ளிட்டவை குறித்து கூறினாா்.