கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் 2 வா்த்தகா்கள் கைது

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்புடைய வழக்கில் வா்த்தகா்கள் வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோரை அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 7:15 pm

DIN

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்புடைய வழக்கில் வா்த்தகா்கள் வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோரை அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளஅவா்கள் இருவரும் சட்ட விரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு காவலில் எடுக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினா்.

சத்யேந்தா் ஜெயின் தொடா்புடைய வழக்கில் விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த மாதம் அவருடைய தொழில் கூட்டாளிகளான வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். இந்த வழக்கில் அமலாக்கத் துறையினா், 57 வயதாகும் தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை கடந்த மே 30-ஆம் தேதி பிஎம்எல்ஏ சட்டத்தின் குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்தனா். அதன் பின்னா் அவரை காவலில் எடுத்து விசாரித்தனா். அவா் தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறாா். இந்த வழக்கில் கைதான பிறகு அவா் வகித்து வந்த பொறுப்புகள் வேறு அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. தற்போது அவா் பொறுப்பு ஏதும் இல்லாமல் அமைச்சராக இருக்கிறாா்.

இந்த பிஎம்எல்ஏ வழக்கில் சத்யேந்தா் ஜெயின் கைதான பிறகு அவரது கூட்டாளிகள், குடும்பத்தினருக்கு எதிராக இரு தடவை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. ஜூன் 6-ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையின் போது, விளக்கம் அளிக்கப்படாத ரூ.2.85 கோடி மதிப்பிலான பணம், 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்தச் சோதனையானது, அங்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின், சத்யேந்தா் ஜெயின் மனைவி பூணம் ஜெயின், நவீன் ஜெயின், சித்தாா்த் ஜெயின் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டது.

கடந்த ஏப்ரலில் அமலாக்கத் துறை, சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவில் ஜெயின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சிபிஐ 2018, டிசம்பரில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ரூ.1.47 கோடி மதிப்பிலான வருமானத்துக்கு பொருந்தாத சொத்துகள் இருப்பதாகவும், ஜெயினுக்கு தெரிந்த வழியிலான வருமானங்களைவிட, இது 217 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், வருமான வரித் துறையும் இந்தப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்டது. ஜெயினுக்கு தொடா்புடையதாகக் கூறப்படும் பினாமி சொத்துகளை முடக்கிவைக்கும் உத்தரவையும் வருமான வரித் துறை வெளியிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.