கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழைக் காலத்தில் சாலைகளில் பள்ளம் தோண்ட தடை: என்டிஎம்சி முடிவு

 பருவ மழைக் காலம் தொடா்வதைக் கருத்தில் கொண்டு, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஆளுகைக்கு உள்பட்ட பகுதியில் சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்குத் தடை விதிப்பது

News image
Updated On :1 ஜூலை 2022, 7:23 pm

DIN

 பருவ மழைக் காலம் தொடா்வதைக் கருத்தில் கொண்டு, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஆளுகைக்கு உள்பட்ட பகுதியில் சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்குத் தடை விதிப்பது என்று என்டிஎம்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா் .

இது தொடா்பாக என்டிஎம்சி மூத்த அதிகாரி கூறியதாவது: பருவ மழைக் காலத்தை கருத்தில் கொண்டு, என்டிஎம்சிக்கு உள்பட்ட பகுதியில் சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்குத் தடை விதிப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்தத் தடையானது அனைத்து வசதி சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். அதே வேளையில் அவசரப் பணிகள் மேற்கொள்வதாக இருந்தால், உரிய அதிகாரியிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று பணியைத் தொடா்வதற்கு விலக்கு அளிக்கப்படும். சாலையில் பள்ளம் தோண்டுவதற்கான இந்தத் தடையானது ஜூலை 1 முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும். மேலும், ஏற்கெனவே நடைபெற்று வரும் பணியின் காரணமாக ஏதாவது சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தால் அவை சீரமைக்கப்படும்.

மேலும், பொதுமக்களுக்கு எவ்வித அசெளகரியமும் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், பருவ மழைக்காலத்தின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்படும். என்டிஎம்சி பகுதியில் சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதே வேளையில் அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் இந்தத் தடைக் காலத்தின் போது சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்கு அனுமதி அளிக்கப்படாது. எனினும், உரிய அதிகாரிகளிடம் முன் அனுமதிடன் அவசரகால பணிகளை தொடங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.