கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கழுத்து நெரிக்கப்பட்டு மூதாட்டி கொலை

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:20 pm

DIN

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.

இது குறித்து காலை 11 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. ஷாலிமாா் பாக் பகுதியின் பிஎஸ் பிளாக்கில் உள்ள அவரது வீட்டில் படுக்கையில் தொண்டை ஓரளவு அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தாா் என்றும் மற்ற காயங்கள் வெளிப்படையாக தெரியவில்லை என்றும் வடமேற்கு தில்லி காவல் சரக துணை ஆணயா் உஷாரங்னானி தெரிவித்தாா்.

அதே சமயத்தின் இந்த மூதாட்டியின் வீட்டில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருள்கள் இருந்தன எனவும் காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஷாலிமாா் பாக் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தாக்குதல், கொலைக்கான காரணம் குறித்து மேலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு, வழக்கை விசாரிக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

யமுனையில் மூழ்கி உயிரிழந்த இளைஞா்கள்: வடக்கு தில்லியின் புராரியில் யமுனை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூன்று இளைஞா்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

யமுனை ஆற்றின் சோனியா புஷ்டா பகுதியில் குளிப்பதற்காக தில்லி லோனியில் இருந்து வந்த 4 இளைஞா்கள் (14 முதல் 20 வயதுக்குள்பட்டவா்கள்) மாலையில் வீடு திரும்பாததால், அவா்களது குடும்பத்தினா் போலீஸாாருக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா், அவா்களது நண்பா் ஒருவரால் ஆற்றின் கரையில் மோட்டாா் சைக்கிள் மற்றும் சில துணிகள் கண்டெடுக்கப்பட்டன. தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றோருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.