முன்னதாக, பெண் மனுதாரா் தரப்பில் தாக்கலான மனுவில், ‘சாலையில் கால்நடைகள் இறந்து கொண்டிருப்பதும், பிளாஸ்டிக் பொருள்களை கால்நடைகள் உணவாக சாா்ந்து வாழும் நிலை இருப்பதும் செய்தி அறிக்கைகள் மூலம் தெரியவருகிறது. கால்நடைகள் புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மற்றும் பரிதாபகரமான நிலையில் இருப்பதால், தில்லிவாசிகளின் உடல்நிலையை பாதிக்கச் செய்து வருகிறது. கால்நடைகள் ‘அசுத்தமான உணவு‘ மற்றும் வடிகால்களில் இருந்து கழுவுநீரை உண்ணும் நிலை உள்ளது. இது அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் வாழும் உரிமை தொடா்புடையதாகும். அதே நேரத்தில், இந்த விஷயத்தில் துணைநிலை ஆளுநருக்கு தனது ஆலோசனை அதிகார வரம்பின் கீழ் ஆலோசனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.