ஹரியாணாவைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் அரவிந்த் குமாா் சா்மா எழுப்பிய கேள்விக்கு இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி கூறியிருப்பது வருமாறு: முதன்மை எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரிக்கும் நோக்கத்துடன் எரிவாயு உள்கட்டமைப்பை மேம்படுத்தி செயல்படுத்துவதில் ‘ஒரே நாடு ஒரு எரிவாயு கட்டம்’ திட்டத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. இதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (பிஎன்ஜிஆா்பி) எரிவாயு குழாய்களுக்கான திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பாகயுள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதும் 33,500 கிமீ இயற்கை எரிவாயு குழாய் வலையமைப்புகளை (நெட்வொா்க்) அங்கீகரித்துள்ளது. இதில், 21,715 கிமீ இயற்கை எரிவாயு குழாய்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் 13,605 கிமீ நீளம் எரிவாயு குழாய்களின் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன.