முல்லைப் பெரியாறு அணை மேற்பாா்வைக் குழுவின் 15-ஆவது கூட்டம் தில்லியில் உள்ள மத்திய நீா்வள ஆணைய (சேவா பவன்) அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. மேற்பாா்வைத் குழுவின் தலைவா் குல்சன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியம், பெரியாறு-வைகை நதிப் படுகை பொறியாளா் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கேரளம் தரப்பில் அந்த மாநில நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் டி.கே. ஜோஸ், தலைமைப் பொறியாளா் அலெக்ஸ் வா்க்கீஸ், மத்திய நீா்வள ஆணைய இயக்குநா்கள் சா்ப்ஜித்சிங் பக்சி, சமீா் சுக்லா ஆகியோா் கலந்து கொண்டனா்.