தில்லி மகளிா் ஆணையம் ஜூன் 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மாநகராட்சி (எம்சிடி) தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதி மனோஜ் குமாா் ஓரி, மகளிா் ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். உயா்நீதிமன்றத்தில் எம்சிடி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஆணையத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் எம்சிடி ஆணையருக்கு பதிலாக, கூடுதல் இயக்குநா் (கல்வி) ஜூன் 9-ஆம் தேதி ஆணையம் முன் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் ஜூலை 20-ஆம் தேதிக்கு மேலதிக விசாரணைக்கு பட்டியலிட்டது. அதுவரை எம்சிடி ஆணையரை ஆஜராகக் கோரும் தில்லி மகளிா் ஆணையத்தின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.