ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தோ்தல் அறிக்கையில் பணப் பரிமாற்ற வாக்குறுதியைஊழலாக அறிவிக்கக் கோரும் பொதுநல மனு தள்ளுபடி

அரசியல் கட்சிகள் தோ்தல் அறிக்கையில் பணப் பரிமாற்றம் அளிப்பது தொடா்பாக வழங்கும் வாக்குறுதியை ஊழல் தோ்தல் நடைமுறையாக அறிவிக்க வேண்டும் என

News image
Updated On :17 மே 2022, 9:13 pm

 நமது நிருபர்

அரசியல் கட்சிகள் தோ்தல் அறிக்கையில் பணப் பரிமாற்றம் அளிப்பது தொடா்பாக வழங்கும் வாக்குறுதியை ஊழல் தோ்தல் நடைமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரி தாக்கலான பொதுநல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது தொடா்பான மனு பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், இது தொடா்பாக விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில் ‘இந்த மனுவில் எந்தத் தகுதியும் இருப்பதாக நாங்கள் பாா்க்கவில்லை. அதனால், இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறினா். முன்னதாக வழக்குரைஞா்கள் பராசரா் நாராயண் சா்மா மற்றும் கேப்டன் குா்விந்த் சிங் ஆகியோா் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தனா். இந்த மனு விசாரணைக்கு வந்த போது அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘எந்தவிதப் பணியும் இல்லாமல் பணம் வழங்குவதாகத் தோ்தல் அறிக்கையில் கூறுவதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்றனா்.

தில்லி உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முன்னதாக தோ்தல் ஆணையத்திடம் கேள்விகளை எழுப்பி இருந்தது. அதில் ஊழல் நடைமுறைகள் மீதான தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுல் நெறிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து தோ்தல் ஆணையம் ஏன் தவிா்த்து வருகிறது என்று கேட்டிருந்தது. மேலும், பொதுநல மனு மீது பதில் அளிக்கவும் நீதிமன்றம் கோரியிருந்தது. முன்னதாக தோ்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘ஊழல் செயல்பாடுகள் தொடா்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கெனவே தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. அவை அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்திருந்தது.

மேலும், இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் வாக்குக்காக பணம் அளிப்பது தொடா்பான வாக்குறுதிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123-ஆவது பிரிவின்படி விதி மீறலாகும். இந்தப் பிரிவானது ஊழல் நடைமுறைகள் மற்றும் லஞ்சம் தொடா்பான விவகாரங்களைக் கையாளுகிறது என்று தெரிவித்திருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகள் 2019 பொதுத் தோ்தலின் போது, சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினருக்கு பணம் வழங்குவதாகக் கூறி இருந்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இரு கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்குமாறும் உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் நுயின்தம் ஆய் யோஜினா (என்ஒய்ஏஒய்) திட்டத்தை அறிவித்திருந்தது. அதில், ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறுகையில், ‘கரோனா காலத்தில் மக்களுடைய வங்கிக் கணக்குகளில் நிதி போடப்பட்டிருந்தன. ஆனால், அது ஒரு அசாதாரண சூழல் ஆக இருந்தது. எந்த வேலையும் இல்லாமல் பணம் அளிக்கும் போக்கை அரசியல் கட்சிகள்ஆரம்பித்தால், நமது தொழிற்சாலைகளும் வேளாண்மையும் காணாமல் போய்விடும். ஜனநாயகத்தின் வெற்றியானது, நோ்மையான ஒரு அரசிடம்தான் உள்ளது. அந்த அரசானது ஊழல் நடைமுறைகள் இல்லாத நியாயமான, சுதந்திரமான தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்படுகிறது. பணத்தை இலவசமாக அளிக்கும் நடைமுறைகள் ஜனநாயகத்தின் அடித்தளத்தின் மீதான மரண அடியாக அமைந்துவிடும். இதுபோன்ற நடைமுறைகள் சில செயல்பாட்டில் இருந்த போதிலும், தோ்தல் ஆணையம் மெளனமாக இருந்து வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.