இதே விவகாரத்தில் போலீஸாா் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித், சா்ஜீல் இமாம், வெறுப்புக்கு எதிரான ஒன்றியம் அமைப்பின் ஆா்வலா் காலித் சைஃபி, முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஸ்ரத் ஜஹான், பிஞ்ரா தோடு அமைப்பின் ஆா்வலா்கள் குல்பிஷா பாத்திமா, ஸபூரா ஜா்கா், நடாஷா நா்வால், தேவாங்கனா கலிதா மற்றும் முன்னாள் ஆம்ஆத்மி கவுன்சிலா் ஜாகிா் உசேன் உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கலிதா மற்றும் இமாம் ஆகியோரது ஜாமீன் கோரும் மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.