நீதிமன்ற உத்தரவின்படி, திலக் நகா் காவல் நிலையத்தின் தரப்பில் நீதிமன்றத்தில் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹா்ஜீத் சிங் ஜஸ்பால் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மனுதாரா்-வழக்குரைஞா் ஜி.எஸ். மணியிடம், போலீஸாா் அளித்துள்ள அறிக்கையில் கே.டி. ஜலீல் விவகாரத்தில் கேரளத்தில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தில்லி நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் எந்த உத்தரவையும் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இதனால், தில்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சட்டவிதிகள், முன்னுதாரண தீா்ப்புகள் ஏதும் இருந்தால் அதை சமா்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை செப்டம்பா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.