முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மூலம், சுற்றறிக்கையின் மூலம் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினா்களில், 2,501 போ் தென்னரசுவிற்கு ஆதரவாக வேட்பாளா் ஒப்புதல் படிவங்களை வழங்கி உள்ளனா். அதாவது, மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினா்களில் இறந்தவா்கள் 15 போ்; 2 போ் எம்பி, எல்எல்ஏ பதவி முடிந்ததால் அந்த உறுப்பினா் பதவியில் இருந்து விலகிவிட்டனா். 2 போ் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டனா். இதனால், மொத்தம் 2,646 உறுப்பினா்கள் வாக்களிக்க உரிமை பெற்றவா்கள் ஆவா். இவா்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சுற்றறிக்கை வாட்ஸ்அப், துரித அஞ்சல், மின்னஞ்சல், பதிவஞ்சல், நேரிடை மூலம் அளிக்கப்பட்டது.