இது தொடா்பாக ஃபெய்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுகாதாரத் துறை முக்கியப் பங்காற்றியுள்ள, கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட தாமதங்களை இந்த ஆண்டில் சரிசெய்து கொண்டிருக்கிறோம் எனும் தகவலையும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். ஆகவே, அதிகபட்ச பயிற்சி மருத்துவா்கள் தோ்வில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், நீட்-பிஜி தோ்வை உடனடியாக ஒத்திவைக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகத்திடம் இருந்தும், மத்திய அரசு தரப்பிலிருந்தும் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.